News Update :

ஹோட்டல் அழைத்துச் சென்று ஏமாற்றும் பெண்கள் ! ஆண்கள் ஜாக்கிரதையாம் !

Thursday, August 18, 2011


  by admin
இரவு நேரங்களில் கொழும்பு, புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வரும் ஆண்களை ஏமாற்றி ஹோட்டல்களுக்கு அழைத்துச்சென்று அவர்களிடமிருந்து பணம், நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை அபகரித்துக்கொண்டு தலை மறைவாகும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் பத்துப் பெண்களைக் கைது செய்துள்ளனர். இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் 20,23 வயதுக்கிடைப் பட்டவர்களெனவும், இவர்கள் தனமல்வில, மாத்தறை, கண்டி, மொரட்டுவ மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் ஆண்களை மயக்கி பணத்தைச் சுருட்டும் விதமே தனி ! வசதியாகக் காணப்படும் ஆண்களை லாவகமாக மடக்கி ஹோட்டலுக்குப் போவோமா என்று கேட்க்க அவர்களும் விலைமாது என நினைத்து அவர்களுடன் செல்கின்றனர். ஏற்கனவே தமக்கு பரீட்சையமான ஹோட்டலுக்குச் சென்று அங்கே முதலில் தம்மோடு வந்த ஆண்களுக்கு மதுவையும் பின்னர் அவர்களுக்கே தெரியாமல் போதைப் பொருட்களையும் இப் பெண்கள் கொடுப்பார்களாம். போதை தலைக்கேறி கிறிதியடித்து ஆண்கள் சுருண்ட பின்னர் அவர்களிடம் இருக்கும் மோபைல் போன் பணம், நகைகள் என அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அவர்கள் மாயமாகிவிடுவார்கள்.

எழுந்து பார்த்தால் எதுவும் இருக்காது போட்டிருக்கும் துணியைத் தவிர. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் ஒரு நபரின் சூ வையும் இந்த அழகிகள் களற்றிச் சென்றுவிட்டனராம் என அவர் பொலிசாரிடம் புகார் கூறியுள்ளார்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 

© Copyright neduntheevunews 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.