
மாவிலித் துறைமுகத்திற்கு மாவிலி என்ற பெயர் வந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. தென்னிந்திய அரசன் மாவல்லவன் இத் தீவை ஆணண்டதாகவும் அதனால் மாவல்லபுர மக்கள் இத் துறைமுகத்தை மாவிலி என அழைத்ததாகவும் ஒரு கர்ணபரம்பரை கதை உண்டு. ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில் இத் துறைமுகம் மூலமாகவே குதிரைகளை ஏற்றி இறக்கினார்கள். மா என்ற சொல்லுக்கு குதிரை, பெரிய என்ற அர்தங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆகவே குதிரைகள் ஏற்றி இறக்கியதாலேயே மாவிலி துறைமுகம் என அழைக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment