News Update :

குவிந்தா...!

Tuesday, August 16, 2011

image
இது நெடுந்தீவின் தென் கிழக்கே காணப்படும் உயரிய முக்கோண வடிவமாகக் கட்டப்பட்ட வெளிச்சவீட்டுக் கோபுரமாகும் இதனை ஒல்லாந்தர்களே கட்டினார்கள்  இவர்களால் கட்டப்பட்ட இக்கோபுரத்திற்கு இராணியின் கோபுரம் என பெயரிட்டார்கள் இதுவே நாளடைவில் மக்களால் குவிந்தா என அழைக்கப்பட்டது நெடுந்தீவை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் திசைமாறிச் செல்லாதிருக்க இது ஒரு திசைகாட்டிக் கோபுரமாக விளங்கியது குவின்ரவர் என்ற பெயரைக்கொண்டு சிலர் இக்கோபுரத்தை பிரித்தானியர்களே கட்டியிருக்கக் கூடுமெனக் கருதிய போதிலும் இங்கு உள்ள கோட்டை ஒல்லாந்தர் காலத்திலேயே கட்டப்பட்டதென மூதாதையர்களின் கர்ணபரம்பரைக் கதைகளாலும்...! அக்கோபுரத்தின் கட்டிட அமைப்பு காலம் என்பவற்றைக் கொண்டு அதனைக் கட்டியவர்கள் ஒல்லாந்தர்கள் என அறியப்படுகின்றன இன்று அழிந்த நிலையில் உள்ளதைக் காணலாம்... 
Share this Article on :

0 comments:

Post a Comment

 

© Copyright neduntheevunews 2010 -2011 | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Powered by Blogger.com.